menu-icon menu-icon
அல்லாஹ்வைக் காணுதல

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளும் விடயத்தில் மிகப் பிரதானமான ஒன்றுதான், மறுமையில் முஃமின்கள் அல்லாஹ்வை எவ்விதத் தடையுமின்றி வெற்றுக் கண்களால் காண்பது. முஃமின்கள் அல்லாஹ்வை இரு இடங்களில் இவ்வாறு காண்பார்கள்.

மறுமையில் விசாரணைக்காக நிற்கும் திடல்.சுவனத்தில் நுழைந்தவுடன்.அல்லாஹ் கூறுகிறான்: “அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும

(அல்குர்ஆன் 75:22-23)
 

“நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்”

(அல்குர்ஆன் 10:26).
 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ‘அதைவிட அதிகமும் கிடைக்கும்’ எனும் வார்த்தைக்கு சுவனத்தில் அல்லாஹ்வைக் காண்பதாகும் என நபி  அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள

(அறிவிப்பவர்: ஸுஹைப)
 

seegogImg
seegogImg

ப ௌர்ணமி தினத்தில் சந்திரனைப் பார்த்து நபி  பின்வருமாறு கூறினார்கள், “'இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்!”

(அறிவிப்பவர்: ஜரீர)
 

மறுமையில் அல்லாஹ்வைக் காண்பதை நம்பிக்கைகொள்ளும் விடயத்தில் இரு கூட்டத்தினர் வழிதவறிவிட்டனர். அவர்கள் வருமாறு: அ. ஜஹ்மிய்யாக்கள், முஃதஸிலாக்கள், (இவர்களின் கருத்துக்களை ஆதரிக்கும் ராபிழாக்களும், இபாழிய்யாக்களும்).

seegogImg

இவர்கள் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாக வைத்து அல்லாஹ்வைக் காண்பதை மறுக்கின்றனர். அல்லாஹ் கூறுகிறான் : நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது... என்று கூறினான்”

(அல்குர்ஆன் 07:143)
 

“பார்வைகள் அவனை அடைய முடியாது; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான்.”

(அல்குர்ஆன் 06:103)
 

அவர்களுக்கான மறுப்பு: “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது” எனும் வாசகம் இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது எனும் அர்த்தத்தையே குறிக்கிறது. ஏனெனில் மூஸா அவர்கள் இவ்வுலகிலே அல்லாஹ்வைக் காண ஆசைப்பட்டு, அவனை காண்பிக்குமாறு வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அல்லாஹ், ‘என்னை பார்க்க முடியாது’ என அவருக்கு பதிலளிக்கிறான். மேலும் இவ் வாசகத்தில் இடம்பெற்றுள்ள முடியாது எனும் வார்த்தையின் அரபு வடிவமான ‘லன்’ என்பது நிரந்தரமாக முடியாது எனும் அர்த்தத்தைக் குறிப்பிடாது.

seegogImg
seegogImg

இறை நம்பிக்கையின் யதார்த்தம

1. இறை நம்பிக்கையானது சொல், செயல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

உள்ளம், நாவு முதலியவற்றுடன் தொடர்புபட்ட சொல், உள்ளம், நாவு, உடல் உறுப்புக்கள் முதலியவற்றுடன் தொடர்புபட்ட செயல் ஆகியவற்றில் இறை நம்பிக்கையானது பிரதிபலிக்கும்.

உள்ளத்துடன் தொடர்புபட்ட சொல்: நம்புதல், உண்மைப்படுத்தல், ஏற்றுக்கொள்ளல்.

நாவுடன் தொடர்புபட்ட சொல்: இஸ்லாத்தின் நாமத்தை மொழிதல், இரு கலிமாக்களையும் பகிரங்கமாக கூறுதல்.

உள்ளத்தடன் தொடர்புபட்டசெயல்: செயற்பாடுகளுக்கான எண்ணங்களையும், நாட்டங்களையும் வகைப்படுத்திக்கொள்ளல். உ+ம்: அல்லாஹ்வின் மீது அன்புகொள்ளல், அவனை அஞ்சுதல், அவனிடம் எதிர்பார்த்தல், அவனிடமே முழுதையும் ஒப்படைத

நாவுடன் தொடர்புபட்ட செயல்: அல்லாஹ்வை நினைவுகூறல், அவனிடமே பிரார்த்தனை புரிதல், அல்குர்ஆனை ஓதுதல்.

உடல் உறுப்புக்களுடன் தொடர்புபட்ட செயல்: உடலால் செய்ய வேண்டிய வணக்கவழிபாடுகளுக்கமைய உடல் உறுப்புக்கள் இசைவாக்கமடைதல்.

seegogImg

ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி சட்டவிரோதமானது என்பதாகும்

அதாவது ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி

shape

அல்லாஹ் கூறுகிறான் : “உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள். இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர்பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.”

(அல்குர்ஆன் 08:02- 04).
 

“நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக்கொண்டும், தம் உயிர்களைக்கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.”

(அல்குர்ஆன் 49:15).
 

நபி அவர்கள் கூறினார்கள் : “'ஈமான் எனும் இறைநம்பிக்கை எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. அதில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் – உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை- என்று மொழிவதாகும். அதில் அந்தஸ்த்து குறைந்தது நோவினை தருபவற்றை பாதையை விட்டும் நீக்குவதாகும். வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்'”

(அறிவிப்பவர்: அபூஹுரைரா)
 

சொல்லும், செயலும் சேர்ந்த கலவையே இறைநம்பிக்கையாகும். இது, இவை இரண்டையும் வேண்டி நிற்கும் உண்மைப் படுத்துதலாகும். இவை இரண்டும் ஒருவரிடம் பிரதிபலிக்காமல் போனால் உண்மைப்படுத்தல் எனும் விடயம் அவரை விட்டும் நீங்கிவிட்டதாகவே கருதப்படும்.

2. ஈமானும் இஸ்லாமும் தனித்துப் பயன்படுத்தப்படும் போது அவை ஒவ்வொன்றும் மற்றதைக் குறிக்கும். ஈமான் எனும் வார்த்தை இஸ்லாம் எனும் வார்த்தையுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் போது வெவ்வேறான இரு அர்த்தங்கள் அவற்றுக்கு வழங்கப்படும். ஈமான் என்பது உள்ளத்துடன் தொடர்புபட்ட நம்பிக்கையையும், இஸ்லாம் என்பது வெளிப்படையாக நாம் செய்யும் இஸ்லாமிய செயற்பாடுகளையும் குறிக்கும் என்பதே அவ் இரு அர்த்தங்களாகும். இவ் அர்த்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு முஃமினுக்கும் முஸ்லிம் எனும் பெயர் சூட்டப்படும். ஆனால் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முஃமின் எனும் பெயர் சூட்டப்படாத

அல்லாஹ் கூறுகிறான் : “நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.”

(அல்குர்ஆன் 49:14)
 

3. ஈமான் கூடுதல் குறைவை சந்திக்கும். அல்லாஹ்வை அறிதல், அவன் இவ் உலகில் நிகழ்த்தியிருக்கும் அத்தாட்சிகளைப் பற்றி சிந்தித்தல், வணக்க வழிபாடுகளை சரிவர செய்தல் போன்றவற்றின் மூலம் இறை நம்பிக்கை அதிகரிக்கும் அதே வேளை அல்லாஹ்வைப் பற்றிய தெளிவின்மை, அவனது அத்தாட்சிகளை மறந்து வாழ்தல், வணக்க வழிபாடுகளில் பொடுபோக்கைக் கையாள்தல், பாவகாரியங்களில் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலம் குறைவடைந்தும் போகும்.

அல்லாஹ் கூறுகிறான் : “உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.”

(அல்குர்ஆன் 08:02)
 

மேலும், “அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன் தாம் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்.”

(அல்குர்ஆன் 48:04)
 

4. இறை நம்பிக்கையில் பல ரகங்கள் உள்ளன. அதன் சில பண்புகள் சில பண்புகளை விடவும் உயரியதாக இருக்கும்.

நபி அவர்கள் கூறினார்கள் “'ஈமான் எனும் இறைநம்பிக்கை எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. அதில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை- என்று மொழிவதாகும். அதில் அந்தஸ்த்து குறைந்தது நோவினை தருபவற்றை பாதையை விட்டும் நீக்குவதாகும். வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்”

(அறிவிப்பவர்: அபூஹுரைரா)
 

5. இறை நம்பிக்கையாளர்களிலும் பல ரகத்தினர் இருக்கின்றனர். சிலர் பூரண இறைநம்பிக்கையாளர்களாக இருப்பார்கள். சிலர் அவர்களை விடவும் தரம் குறைந்தவர்களாக இருப்பார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: “பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.”

(அல்குர்ஆன் 35:32)
 

seegogImg
seegogImg

இரு ஷஹாதாக்களையும் பொருளுணர்ந்து நம்பிக்கை கொள்பவர் இறைநம்பிக்கையின் அடிப்படையை அடைந்திடுவார். இஸ்லாம் கடமையாக்கிய விடயங்களை செய்து, தடுத்துள்ளவற்றை தவிர்ந்து நடப்பவர் அவசியம் இருக்க வேண்டிய இறைநம்பிக்கையை அடைந்திடுவார். இஸ்லாம் கடமையாக்கியவற்றையும், விரும்பியவற்றையும் செய்து, தடுத்தவற்றையும், வெறுத்தவற்றையும் தவிர்ந்து நடப்பவர் பூரண இறைநம்பிக்கையை அடைந்திடுவார்.

6. 'அல்லாஹ் நாடினால் நான் முஃமினாக இருப்பேன்' என இறை நம்பிக்கையில் விதிவிலக்கைப் புகுத்துவது மூன்று நிலைகளில் அவதானிக்கப்படும்.

அ. இறைநம்பிக்கையின் அடிப்படை அம்சத்தில் சந்தேகம் கொண்டவராக இவ் வார்த்தையைக் கூறுவது ஹராமாகும். அது அவரை இறை நிராகரிப்பின் பக்கம் கொண்டுபோய்விடும். ஏனெனில் இறைநம்பிக்கையின் அடிப்படையே உறுதியாக நம்புதல் என்பது தான்.

seegogImg

ஆ. தனக்கு அவசியமானளவு, அல்லது பரிபூரண ஈமான் இருப்பதாகத் தன்னைத்தானே சுத்தப்படுத்தும் நிலை ஏற்படுமென அஞ்சினால் இவ்வாறு கூறுவது அவசியமானதாகும். இ. அல்லாஹ்வின் நாட்டத்தை மையப்படுத்தும் நோக்கில் இவ்வாறு கூறுவது ஆகுமானதாகும்.

7. பாவங்கள் செய்வதன் மூலம் இறை நம்பிக்கை எனும் பண்பு ஒருவரை விட்டும் முழுமையாக அழிந்துபோய்விடாது.

மாறாக இறை நம்பிக்கை குறைவடைந்திடும். பெரும் பாவம் செய்பவர் இறைநம்பிக்கையில் குறையுள்ள ஓர்முஃமினாகவே கருதப்படுவார். அவரிடம் அடிப்படை இறைநம்பிக்கை இருப்பதால் முஃமின் எனவும், பெரும்பாவம் செய்ததற்காக பாவி எனவும் பெயர் சூட்டப்படுவார். இதற்காகவேண்டி அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றப்படவோ, நரகத்தில் நிரந்தரமாக தங்கிடவோ மாட்டார். மாறாக அல்லாஹ்வின் நாட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார். அவன் நாடினால் இவரை மன்னித்து சுவனத்தில் நுழைவிப்பான். அல்லது அவரின் பாவத்தின் அளவுக்கான தண்டனையை நரகில் வழங்கிவிட்டு, பரிந்துரை மூலமோ, அல்லாஹ்வின் கருணை மூலமோ மீண்டும் சுவனத்தில் நுழைத்திடுவான்.

seegogImg

அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.”

(அல்குர்ஆன் 04:48)
 

நபி அவர்கள் கூறினார்கள் : “சுவனவாதிகள் சுவனம் சென்று, நரகவாதிகள் நரகம் சென்ற பின், அல்லாஹ் தஆலா "தன்னுடைய உள்ளத்தில் கடுகளவாவது ஈமானுள்ளவர்களை நரகிலிருந்து வெளியேற்றுங்கள்" என்று கூறுவான். அவர்கள் கருகிய நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, நஹ்ருல் ஹயாத் எனும் ஆற்றில் போடப்படுவார்கள்.”

(அறிவிப்பவர்: அபூ ஸஈத் அல்குத்ர)
 

நபி அவர்கள் கூறினார்கள “தம் உள்ளத்தில் ஒரு வால் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியவர் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் இதயத்தில் ஒரு கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' சொன்னவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் உள்ளத்தில் ஓர் அணு அளவு நஇருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' கூறியவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார

(அறிவிப்பவர்: அன)
 

நபி 'நன்மை' என்று கூறினார்கள் என மேற்கண்ட நபி மொழியில் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலெல்லாம் ஈமான் எனும் நம்பிக்கை என்று குறிப்பிட்டதாக அனஸ்  அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.” .

இவ்விடயத்தில் சில தரப்பினர் வழிகெட்டவர்களாக இஸ்லாமிய அறிஞர்களினால் வகைப்படுத்தப்படுகின்றன

1. வஈதிய்யாக்கள்:

பெரும் பாவம் செய்தவர்களுக்கு மறுமையில் பரிந்துரை (ஷபாஅத்) கிடையாது. அவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை நிச்சயம் கிடைத்துத்தான் ஆக வேண்டும் எனக் கூறுபவர்கள். இவர்களில் இரு தரப்பினர் காணப்படுகின்றனர்:

அ. ஹவாரிஜ்கள்:

பெரும் பாவம் செய்தவர் இறை நம்பிக்கையிலிருந்து வெளியேறி இறைநிராகரிப்பில் நுழைகிறார். எனவே இவர் நரகில் நிரந்தரமாக தங்கிவிடுவார் என இவர்கள் கூறுகின்றனர்.

ஆ. முஃதஸிலாக்கள்:

பெரும் பாவம் செய்தவர் இறை நம்பிக்கையிலிருந்து வெளியறினாலும் இறை நிராகரிப்பில் நுழைந்திட மாட்டார். அவர் இவ்வுலகில் இறைநம்பிக்கையாளர், இறை நிராகரிர்ப்பாளர் என எதுவுமின்றி இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் மனிதராக காணப்படுவார். மறுமையில் நிரந்தரமாக நரகில் நுழைந்திடுவார் என இவர்கள் கூறுகின்றன

இவர்களுக்கான மறுப்பு:

1. பெரும் பாவம் செய்தவரின் இறைநம்பிக்கை முழுமையாக அழிந்திடாது. அவர் இறைவிசுவாசம் கொண்டோரின் சகோதரராகவே காணப்படுவார் என்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: “ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலைசெய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.”

(அல்குர்ஆன் 02:178)
 

மேற்கண்ட வசனத்தில் கொலை செய்தவனை கொலைசெய்யப்பட்டவனின் சகோதரன் என அல்லாஹ் கூறுகிறான்.

மேலும ம் “முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக் கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் செய்து வைய்யுங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் செய்து வைய்யுங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

(அல்குர்ஆன் 49:09-10)
 

போரில் ஈடுபடும் இரு தரப்பினரையும் இறை விசுவாசிகள் எனவும், இறை விசுவாசத்தின் அடிப்படையில் அவர்கள் சகோதரர்கள் எனவும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

2. இணைவைப்பு அல்லாத ஏனையவற்றில் அல்லாஹ் தான் நாடிய�ோருக்கு மன்னிப்பை வழங்குவான். கடுகளவேனும் ஈமான் உள்ளவனும் நரகிலிருந்து வெளியேற்றப்படுவான். பரிந்துரை பற்றி வந்துள்ள பல நபிமொழிகள் இதனை உறுதி செய்கின்றன.

2. முர்ஜிஆக்கள்:

செயல்கள் ஈமானிலும், அதன் யதார்த்தத்திலும் நுழையாது எனக் கூறுபவர்கள். இவர்களில் சில தரப்பினர் காணப்படுகின்றன

அ. ஜஹ்மிய்யாக்கள்: இறை நம்பிக்கை என்பது உள்ளத்தால் மாத்திரமே உண்மைப்படுத்திட வேண்டும். அதற்கும் செயல்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இறைநிராகரிப்பு இருக்கும் போது எவ்வாறு ஈமான் பயனளிக்காதோ அதேபோன்று ஈமான் இருக்கும்போது பாவங்களும் எவ்வித விபரீதத்தையும் ஏற்படுத்தாது என்பதே இவர்களது வாதமாகும்.

இ. இஸ்லாமிய சட்டக்கலையில் இருக்கும் முர்ஜிஆக்கள்: உள்ளத்தால் உண்மைப்படுத்துவதும், நாவால் மொழிவதும் மாத்தரிமே இறைநம்பிக்கை. செயல்கள் இதற்குள் அடங்கிடாது. இவை இரண்டினதும் பலனே செயற்பாடுகளாகும். எனவே இறைநம்பிக்கைக்கும், செயல்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என இவர்கள் கூறுகின்றனர். செயல்கள் அறவே தேவையில்லை என்று இவர்கள் கூறுவதில்லை என்பதையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களுக்கான மறுப்பு:

1. செயல்களுக்கும் ஈமான் (இறை நம்பிக்கை) எனும் பெயரை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். பைத்துல் மக்திஸைப் பார்த்து தொழுதுவிட்டு, கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னர் மரணித்தவர்கள் பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: “அல்லாஹ் உங்கள் ஈமானை (தொழுகையை) வீணாக்கமாட்டான்;”

(அல்குர்ஆன் 02:143)
 

2. ஒருவர் பெரும் பாவம் செய்யும் வேளையில் பரிபூரண முஃமினாக இருக்க மாட்டான் என நபி  அவர்கள் பின்வரும் நபிமொழியில் கூறியுள்ளார்கள். “'விபசாரி, விபசாரம் புரியும்போது முழுமையான இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் விபசாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும்போது முழுமையான இறைநம்பிக்கை யாளனாக இருக்கும் நிலையில் மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகிற பொழுது முழுமையான இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரின் பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும்போது முழுமையான இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் கொள்ளையடிப்பதில்லை'”

(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா)
 

இதில் பாவச்செயலை பரிபூரண இறைநம்பிக்கை இருக்கும் நிலையில் ஒருவர் செய்யமாட்டார் என நபியவர்கள் குறிப்பிட்டதிலிருந்து செயல்களும் ஈமானில் அடங்கும். நல்ல செயல்களை செய்யும் போது ஈமான் அதிகரிக்கிறது, தீய செயல்களை செய்வதன் மூலம் ஈமான் குறைவடைகிறது என்பதை தெளிவாகவே விளங்கமுடிகிறது.

மேற்கண்ட வஈதிய்யாக்கள், முர்ஜிஆக்கள் ஆகிய இரு பிரிவினரதும் தவறான இக்கொள்கைக்கஅடிப்படைக் காரணம் அவர்கள் ஈமானைப் பல கிளைகளற்ற ஒரு பொருளாகப் பார்த்ததே. ஒன்றோ முழுமையாக இருக்கும், அல்லது முழுமையாக அழிந்து விடும். முர்ஜீஆக்கள் ஒருவன் உள்ளத்தால் மாத்திரம், அல்லது நாவினால் மாத்திரம், அல்லது உள்ளம், நாவு இரண்டினாலும் ஈமான் கொண்ட உடனே அவன் நற்செயல்கள் செய்யாவிட்டாலும் பரிபூரண முஃனாகவே அவனைப் பார்த்தார்கள். இந்தக் கோணத்தில் அவர்கள் எல்லைமீறிச் சென்று விட்டார்கள். மறுபுறம் வஈதிய்யாக்கள் ஒருவன் ஒரு பெரிய பாவத்தைச் செய்தவுடனே அவனை முழுமையாக ஈமானை இழந்த காபிராகவே பார்க்கிறார்கள். இந்தக் கோணத்தில் அவ்ரகளும் எல்லைமீறிச் சென்றுவிட்டனர். இரு தரப்பினரும் முதலில் வைக்கும் வாதம் ஒன்றுதான். ஆனால் இறுதியில் அவர்களுடைய முடிவு ஒன்றுக்கொன்று முரணானது.